Friday, March 4, 2011

ஓட்டல்களாக மாறி வரும் பாகிஸ்தான் இந்து கோவில்கள்




இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் உள்ள இந்து கோவில்கள், சுற்றுலாத் தலங்களாகவும், ஓட்டல்களாகவும், பள்ளிக் கூடங்களாகவும் மாறி வருவதாக, பாகிஸ்தான் இந்து அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.
பாகிஸ்தானில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான தொன்மை வாய்ந்த 360 இந்து கோவில்கள் உள்ளன. அவற்றுக்குச் சொந்தமாக, லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் உள்ளன. பாகிஸ்தானில் தற்போது, 39 லட்சம் இந்துக்கள் உள்ளனர். அங்கு, அவர்கள் சிறுபான்மையினர். சமீப காலமாக பாகிஸ்தானில், சிறுபான்மையினர் மீதான அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தொன்மை வாய்ந்த இந்து கோவில்கள் ஓட்டல்களாகவும், சுற்றுலாத் தலங்களாகவும் மாற்றப்பட்டு வருவதாக, அங்குள்ள இந்து அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன.கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ள 700 ஆண்டு பழமையான காளி கோவிலை, ஒரு கும்பல் ஆக்கிரமித்து, ஓட்டலாக மாற்றிவிட்டது. அக்கும்பல் மாத வாடகையாக 850 ரூபாய் மட்டும் அளிப்பதாகவும், புனிதமற்ற முறையில் கோவில் பயன்படுத்தப்படுவதாகவும் அப்பகுதியினர் புகார் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து, பாக்., இந்து உரிமை இயக்கத் தலைவர் சாயப் தியால் கூறுகையில்,"இதுபற்றி பலமுறை அரசிடம் புகார் அளித்தோம். 2009 ஏப்ரலில் அளித்த புகாரின் அடிப்படையில், அப்போதைய ஓவாய்ஸ் கனி, காளி கோவில் பற்றி விசாரணை நடத்த உத்தரவிட்டார். இதுவரை நடவடிக்கை எதுவும் இல்லை' என்று தெரிவித்தார்.
அதேபோல், இஸ்லாமாபாத்தில் உள்ள ராம் குண்ட் மந்திர் என்ற கோவிலும், தற்போது சுற்றுலாத் தலமாக மாற்றப்பட்டுள்ளது. அபோடாபாத் நகரில் உள்ள"ஆராய மந்திர்' என்ற கோவில் ஏற்கனவே சிதிலமடைந்திருந்த நிலையில், தற்போது பள்ளிக் கூடமாக செயல்படுகிறது.அக்கோவிலின் அருகில் ஒரு குருத்வாரா, ஒரு பள்ளிவாசல் உள்ளன. கோவில் புதுப்பிக்கப்பட்டால் அந்நகர், மத நல்லிணக்கத்துக்கு நல்ல சான்றாகத் திகழும் என்று, இந்துக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.குஜ்ரன்வாலா பகுதியில், கி.பி., 15ம் நூற்றாண்டைச் சேர்ந்த பல கோவில்கள் பாழடைந்த நிலையில், குரங்குகள், கழுதைகள், குதிரைகள் தங்கும் கூடாரங்களாக மாறிவிட்டன. சக்வால் பகுதியில் உள்ள பிரபல அனுமான் கோவில் அங்குள்ள உப்பளத் தொழிலாளர்களின் அலுவலமாக இயங்குகிறது.பெஷாவரில் ஒரு காளி கோவில் அங்குள்ள வர்த்தகர்களால், வணிக வளாகமாக மாற்றப்பட்டு விட்டது. பஞ்சாப் மாகாணத்தில் பக்கார் நகரில் உள்ள ஷீரன் வாலி கோவில், மதரசாவாக மாறிவிட்டது. அங்குள்ள இந்துக்கள் மதரசா செயல்படுவதில் தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றும், பாழடையும் கோவிலைப் புதுப்பித்தால் போதும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.கடந்த 1947ல் நிகழ்ந்த பிரிவினையின் போது, பாகிஸ்தானில் இருந்து இந்துக்கள் வெளியேற்றப்பட்டனர்.
அப்போது அவர்களால் கோவில்களுக்கு எழுதி வைக்கப்பட்ட சொத்துக்களை பராமரிக்க "வெளியேற்றப்பட்டவர் சொத்து அறக்கட்டளை வாரியம்' (இ.டி.பி.பி.,)என்ற அமைப்பை பாக்., அரசு உருவாக்கியது. இந்த அமைப்பின் கீழ் புனித தலங்கள் மற்றும் கோவில் நிலங்கள் உள்ளன.இந்த வாரியத்திடம் தற்போது, கோவில்களுக்குச் சொந்தமான 1,35,000 ஏக்கர் நிலங்கள் உள்ளன. இவற்றில் 1,25,000 நிலங்கள் பாசனத்திற்குரியவை. இந்த வாரிய நிர்வாகத்தில் சிறுபான்மையினர் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. இதுகுறித்து பலமுறை அவர்கள் கோரிக்கை விடுத்தும் நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. அயோத்திய கலவரத்திதின் மட்டும் பாகிஸ்தானில் 3000 இந்து கோவில்கள் இடிக்கப்பட்டன .வங்காளதேசத்தில் 2500 கோவில்கள் இடிக்கப்பட்டன. வங்காளதேச தலைநகரான டாக்காவில் பழமை வாய்ந்த புகழ் பெற்ற டாக்கீஸ்வரி அம்மன் கோவில் உள்பட ..

Thursday, March 3, 2011

The Hindu way of life


One fundamental thing that must be cleared up about the Hindu way of life is that with the termHindu there is no “ism”. Today the word Hindu has taken a different meaning because of theso-called Hindutva and other such organisations, but the word Hindu essentially comes from the wordSindhu. Anybody who is born in the land of Indus is a Hindu — it is a cultural and geographic identity. Itis like saying “I am an Indian”, though it is a more ancient identity than being an Indian. “Indian” is onlyabout 60 years old. Hindu, on the other hand, is an identity that we have always lived with — we call thiscountry Hindustan and whatever we did in this culture was Hindu.

Being a Hindu does not mean having a particular belief system; there is no particular God or ideologywhich one can call as the Hindu way of life. You can be a Hindu irrespective of whether you worship aman-God or a woman-God, whether you worship a cow or a tree. If you don’t worship anything you canstill be a Hindu. So you are a Hindu irrespective of what you believe or don’t believe in. At the same time,there was a common line running through all these — in this culture, the only goal of human life isliberation or mukti; liberation from the very process of life, from everything that you know as limitationsand to go beyond that. God is seen as one of the stepping stones; God is not held as the ultimatething. This is the only culture on the planet which is a godless culture in the sense that there is noconcretised idea of God in this culture.

You can worship a rock, a cow, your mother — you can worshipwhatever you feel like because this is a culture where we have always known that God is our making.Everywhere else people believe that God created us. Here we know that we created God so we taketotal freedom to create the kind of God we can relate to. If you like the tree in your garden you canworship it and nobody thinks it is absurd. You can worship a stone on the golf course and nobodythinks it’s absurd. If you can relate to that, that’s what you worship because what you are reverentialtowards is not important; being reverential is what is important.

There is so much misunderstanding about these things because there is a certain dialectical ethos tothe culture where we want to express everything in a story or in a song; but in a way, it is a science ofhow to take a human being to his ultimate potential. tks nidhthi..

Keep your eye on your own seasons like a farmer

One of the difficulties we face in our industrialized age is the fact we’ve lost our sense of seasons. Unlike the farmer whose priorities change with the seasons, we have become impervious to the natural rhythm of life. As a result, we have our priorities out of balance.
Let me illustrate what I mean: For a farmer, springtime is his most active time. It’s then when he must work around the clock, up before the sun and still toiling at the stroke of midnight. He must keep his equipment running at full capacity because he has but a small window of time for the planting of his crop. Eventually winter comes when there is less for him to do to keep him busy.
There is a lesson here. Learn to use the seasons of life. Decide when to pour it on and when to ease back, when to take advantage and when to let things ride. It’s easy to keep going from nine to five year in and year out and lose a natural sense of priorities and cycles. Don’t let one year blend into another in a seemingly endless parade of tasks and responsibilities. Keep your eye on your own seasons, lest you lose sight of value and substance.

Monday, February 28, 2011

top slip trek.( known as anaimalai)












thankzx to all for wonderful trip. It was a pleasure meeting you all. My 2 days up there were absolutely fantastic. It was wonderful be with everybody. I know I forgot a some of names but I can't forgot any event. you all enough for making me feel welcome. I want to thank mr.balu.for the opportunity to be apart of this incredible adventure. this was looking to be the most visullay stunning episdoes.
place-Pandaravarai, Kolambumalai, Ambuliwatch tower, Mount Stuart, Kozhikkamuthy, Karian Shola watch tower.

Saturday, September 25, 2010

தேசத் துரோகிகள்

இயற்கையின் சீற்றத்தாலோ, அந்நியர் படையெடுப்பாலோ, பாதிக்கப்பட்டிருந்தால் நாம் அதை இந்தியாவுக்கு ஏதோ சோதனைக் காலம் என்று சமாதானப்படலாம். ஆனால், தெரிந்தே தான் பிறந்த தாய் நாட்டை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருக்கும் ஆட்சியாளர்கள் ஏமாற்றினால் – அவமானத்துக்கு உள்படுத்தினால் அதை வேதனைக் காலம் என்றுதான் சொல்ல வேண்டுமே தவிர, சோதனைக் காலம் என்று ஒதுக்கிவிட முடியாது.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் தொடங்க சரியாக பத்து நாள்களே உள்ள நிலையில், ஒன்றன்பின் ஒன்றாக புற்றீசல்போல புறப்பட்டு வரும் ஊழல்களும், அரைகுறையாக முடிக்கப்பட்டுக் கிடக்கும் பணிகளும், வெளிநாட்டவர் முன்னால் இந்தியாவை ஏளனத்துக்கும் கேலிக்கும் உள்ளாக்கி இருக்கும் சுகாதாரக் குறைவான ஏற்பாடுகளும் அதிர்ச்சியில் உறையவைக்கின்றன. ஒன்றா இரண்டா, ஏறத்தாழ 70,000 கோடி விரயமாக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்த வேண்டும் என்று யாரும் நம்மை கட்டாயப்படுத்தவில்லை. நாமேதான் வலியப்போய், எங்கள் நாட்டில் காமன்வெல்த் போட்டிகளைச் சிறப்பாக நடத்திக் காட்டுகிறோம் என்று கேட்டுப் பெற்றோம். அதற்காக நாம் என்னென்ன சலுகைகளைத் தருவதாக வாக்குறுதி அளித்திருக்கிறோம் என்று தெரியுமா?
தில்லியில் நடைபெற இருக்கும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள இருக்கும் ஒவ்வொரு நாட்டுக் குழுவுக்கும் இலவச விமானப் போக்குவரத்துச் செலவு, தங்கும் வசதி, உள்ளூரில் பயணம் செய்ய இலவச வசதி, இவையெல்லாம் போதாதென்று பங்குபெறும் விளையாட்டு வீரர்களின் பயிற்சிக்காக ஒவ்வொரு நாட்டுக்கும் தலா ஒரு லட்சம் டாலர் வழங்கவும் ஒத்துக்கொண்டிருக்கிறோம். இப்படியெல்லாம் நமது தகுதிக்கு மீறிய வாக்குறுதிகளை அள்ளி வீசியது மட்டுமல்லாமல், காமன்வெல்த் போட்டிகள் நடத்த அனுமதி கிடைத்தது முதல், இந்திய ஒலிம்பிக் கமிட்டி இஷ்டத்துக்குப் பணத்தை வாரி இறைக்கவும் தொடங்கியுள்ளது.
முதலில் 655 கோடி செலவாகும் என்று கருதப்பட்ட காமன்வெல்த் போட்டிகள் 11,490 கோடியாக செலவு கணக்கை அதிகரித்தது. இப்போது அது மேலும் அதிகரித்திருக்கிறது. இது போதாதென்று கட்டமைப்பு வசதிகள் என்கிற பெயரில் தில்லி அரசு செலவு செய்யும் தொகை சுமார் 17,000 கோடி. மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை, விளையாட்டு அமைச்சகம், மாநில அரசின் பொதுப்பணித்துறை இப்படி எல்லா துறைகளின் ஒட்டுமொத்த செலவுகளையும் – இதில் பெரும்பகுதி ஏப்பம் விடப்பட்டது என்பது வேறு கதை – சேர்த்துக் கணக்குப் பார்த்தால் ஏறத்தாழ 70,000 கோடி வரை காமன்வெல்த் போட்டிகள் என்கிற பெயரில் மக்கள் வரிப்பணம் விரயமாக்கப்பட்டிருக்கும் என்று தோன்றுகிறது.
ஏற்கெனவே இருக்கும் விளையாட்டு அரங்கங்களை மேம்படுத்துகிறோம் என்கிற பெயரில் கையாளப்பட்டிருக்கும் தொகையைக் கேட்டால் தலை சுற்றுகிறது. ஜவாஹர்லால் நேரு ஸ்டேடியம் 961 கோடி, இந்திரா காந்தி ஸ்டேடியம் 669 கோடி, தயான்சந்த் ஹாக்கி ஸ்டேடியம் 262 கோடி, கார்னிசிங் துப்பாக்கி சுடும் மைதானம் 149 கோடி என்று ஏறத்தாழ 44,459 கோடி செலவிடப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு பெரோஸ் ஷா கோட்லா கிரிக்கெட் மைதானத்தின் மேம்பாட்டுக்கு 85 கோடியும், ஹைதராபாத் லால்பகதூர் சாஸ்திரி ஸ்டேடியத்துக்கு 80 கோடியும்தான் செலவாகி இருக்கிறது என்பதை நாம் ஒப்பிட்டுப் பார்த்தால் ஊழலின் அளவு எத்தகையது என்பது புரியும்.
961 கோடியில் புதுப்பிக்கப்பட்ட ஜவாஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் உள்ள மேம்பாலம் உடைந்து விழுகிறது. தில்லி முதல்வர் ஷீலா தீட்சித், “அது ஒன்றும் பொது மக்களின் உபயோகத்துக்காகக் கட்டப்பட்டதல்ல’ என்று சாக்குப் போக்கு கூறுகிறார். வெளிநாட்டு அணியைச் சேர்ந்தவர்கள் பார்வையிட வந்தபோது, விளையாட்டு வீரர்கள் தங்கும் அறைகளில் தெரு நாய்கள் கட்டிலில் படுத்து உறங்கிக் கொண்டிருப்பதையும், கழிவறைகளில் வேலையாள்கள் அசுத்தம் செய்துவிட்டு தண்ணீர் ஊற்றாமல் சென்றிருப்பதையும் பார்த்து அதிர்ந்துவிட்டிருக்கிறார்கள். பன்னாட்டு விளையாட்டு வீரர்கள் தங்குவதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் “விளையாட்டு கிராமம்’ அசுத்தமாக, சுகாதாரமற்று இருக்கிறதே என்கிற வெளிநாட்டு விருந்தாளிகளின் கேள்விக்கு நம்மவர்கள் தரும் பதில் என்ன தெரியுமா? “”சுத்தம், சுகாதாரம் என்பது ஒவ்வொரு நாட்டினருக்கு ஒவ்வொரு விதத்தில் அமையும்” என்பது. அதாவது, இந்தியர்களின் சுகாதாரஅளவு இதுதான் என்கிறார்களா? அப்படியானால், இவர்கள்
பன்னாட்டு விளையாட்டு வீரர்களை அழைத்து காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி நடத்த முன்வந்திருக்கக் கூடாது. விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ்.கில் கேள்விகள் கேட்டால், தனக்கு எதுவுமே தெரியாது என்று சொன்னால்கூடப் பரவாயில்லை. உங்களுக்கெல்லாம் பதில் சொல்லவேண்டிய அவசியம் எனக்கில்லை என்பதுபோல கேட்டும் கேட்காமலும் நகர்கிறார். மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி அதற்கும் ஒருபடி மேலே போய், “எல்லாம் இப்படித்தான் இருக்கும், நம்ம ஊர் கல்யாணங்களைப்போல, விளையாட்டுத் தொடங்கிவிட்டால் சரியாகிவிடும்’ என்று விட்டேத்தியாக பதிலளிக்கிறார். ஒரு வருடத்துக்கு முன்பே காமன்வெல்த் போட்டி அமைப்பாளர் குழுத் தலைவர் இந்தியா வந்து பார்த்துவிட்டு இந்த நிலையில், போட்டிக்கு முன்பு அரங்கங்களும், கட்டமைப்பு வசதிகளும் தயாராகுமா என்பது சந்தேகம்தான் என்று கூறியபோதே, பிரதமர் முதல் அனைவரும் சுறுசுறுப்பாகி விழித்துக் கொண்டிருக்க வேண்டாமா? ஆனால், யாருமே சட்டை செய்ததாகத் தெரியவில்லை.
அசிரத்தை, எந்தவிதத் திட்டமிடலும் இல்லாமல், எல்லாம் நடந்துவிடும் என்கிற பொறுப்பின்மை. அதையே சாக்காக்கி, இந்தியாவின் மானம் கப்பலேறிவிடும் என்று பயமுறுத்தி, செலவுக்கான பட்ஜெட்டை அதிகரித்துவிட்டார்கள் இந்திய ஒலிம்பிக் குழுவின் பாவிகள். கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. வேலையைத் துரிதப்படுத்த மீண்டும் கோடிக்கணக்கில் பணம் வாரி வழங்கப்பட்டது. இதை எல்லாம் சொல்லி என்ன பயன்? விளையாட்டுப் போட்டிகள் தொடங்க இன்னும் பத்து நாள்கள்தான் இருக்கின்றன. இன்னும் 30 சதவிகித வேலைகள் முடிவடையவில்லை. கட்டி முடிக்கப்பட்ட கட்டடங்களில் ஆங்காங்கே பூச்சுகள் பெயர்ந்து விழுகின்றன. ஸ்டேடியங்களின் கூரையிலிருந்து பதிக்கப்பட்டிருக்கும் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் உடைந்து விழுகிறது. சாலை வசதிகள், மின்சார வேலைகள் எல்லாமே அரைகுறை. தரக்குறைவான வேலைகள். அங்குலத்துக்கு அங்குலம் ஊழல் பல்லிளிக்கிறது. வெளிநாட்டு வீரர்கள் பலர் தாங்கள் வருவதில்லை என்று கூறிவிட்டனர். ஏதாவது தீவிரவாதத் தாக்குதல் – நடக்க வேண்டாம், நடக்கக்கூடாது – நடந்தால், கேட்கவே வேண்டாம். இந்தியாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளும் வரமாட்டார்கள்.
70,000 கோடியில் இந்தியாவிலுள்ள ஏறத்தாழ 500 மாவட்டங்களில், மாவட்டத்துக்கு 100 இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து பயிற்சி கொடுத்து விளையாட்டு வீரர்களாக்கியிருந்தால், ஒலிம்பிக்கில் பல தங்கப்பதக்கங்களைப் பெற்று இந்தியாவுக்குப் பெருமை தேடியிருக்கலாமே! ஆப்பிரிக்க நாடுகளான கென்யா, உகாண்டா, தான்சானியா, ஜிம்பாப்வே போன்றவைக்கு இருக்கும் முன்யோசனைகூட ஹார்வர்ட் பட்டதாரிகளான நமது மன்மோகன் சிங் குழுவினருக்கு ஏன் இல்லாமல் போயிற்று? இவர்களுடைய அசிரத்தை இப்போது இந்தியாவுக்கு உலகளாவிய அளவில் “ஊழல்’ பதக்கத்தை அல்லவா தேடித்தந்திருக்கிறது. எல்லோரும் இந்திய ஒலிம்பிக் கழகத் தலைவர் சுரேஷ் கல்மாதியை குற்றம் சாட்டுகிறார்கள். அவர் மட்டுமா குற்றவாளி? தில்லி முதல்வர் ஷீலா தீட்சித், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ்.கில், மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி எல்லோரும்தான் குற்றவாளிகள்.
அணுசக்தி ஒப்பந்தம் தமது மானப்பிரச்னை என்று கருதிய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, உலக அரங்கில் இந்தியாவின் கெளரவம் பறிபோவதைப் பற்றி அக்கறை இல்லாமல் போயிற்றே, அவர் குற்றவாளி இல்லையா? கடந்த ஒரு வருடமாகப் பத்திரிகைகள் எச்சரிக்கின்றன. நாடாளுமன்றத்தில் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. ஊழல் குற்றச்சாட்டுகள் ஒன்றன்பின் ஒன்றாக எழுகின்றன. எதைப்பற்றியும் கவலைப்படாமல் 70,000 கோடி விரயமாவதையும், தேசத்தின் கௌரவம் கேள்விக்குறியாவதையும் வேடிக்கை பார்ப்பதற்காகவா நமக்கு ஒரு பிரதமர்? நமக்கு ஒரு மத்திய அரசு? நமக்கு ஒரு நிர்வாக இயந்திரம்? இன்னொரு தேசப்பற்று மிக்க நாடாக இருந்தால், மேலே குறிப்பிட்ட அனைவரும் தேசத்துரோகக் குற்றத்துக்காக தூக்கிலிடப்பட்டிருப்பார்கள். என்ன செய்வது, இந்தியாவுக்கு அவமானங்களையும், தேசத் துரோகிகளையும் சுமப்பதே தலையெழுத்தாகிவிட்டது!

thanks-thinamani,charu

Thursday, September 9, 2010

ஜேசுதாசின் குரல் வளமும் பாடலும் அற்புதம்

கண்ணை மூடிக்கொண்டு கேட்டால் எங்கேயோ இழுத்துக்கொண்டுசெல்கிறது. யேசுதாஸ் அவர்கள் குரல் ஈர்ப்பு.


ஹரிவராசனம் விஸ்வமோகனம்
ஹரிததீஸ்வரம் ஆராத்யபாதுகம்
அறிவிமர்தனம் நித்யநர்த்தனம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே

ஷரணம் ஐயப்பா சுவாமி ஷரணம் ஐயப்பா
ஷரணம் ஐயப்பா சுவாமி ஷரணம் ஐயப்பா

சரணகீர்த்தனம் ஷக்தமானசம்
பரணலோலுபம் நர்த்தனாலசம்
அருணபாசுரம் பூதநாயகம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே

ஷரணம் ஐயப்பா சுவாமி ஷரணம் ஐயப்பா
ஷரணம் ஐயப்பா சுவாமி ஷரணம் ஐயப்பா

ப்ரணயசத்யகம் ப்ராணநாயகம்
ப்ரணதகல்பகம் சுப்ரபாஞ்சிதம்
ப்ரணவமந்திரம் கீர்த்தனப்ரியம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே

ஷரணம் ஐயப்பா சுவாமி ஷரணம் ஐயப்பா
ஷரணம் ஐயப்பா சுவாமி ஷரணம் ஐயப்பா

துரகவாகனம் சுந்தரானனம்
வரஹதாயுகம் வேதவர்நிதம்
குருக்ருபாகரம் கீர்த்தனப்ரியம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே

ஷரணம் ஐயப்பா சுவாமி ஷரணம் ஐயப்பா
ஷரணம் ஐயப்பா சுவாமி ஷரணம் ஐயப்பா

த்ருபுவனார்ஜிதம் தேவதாத்மகம்
த்ரனயனம் ப்ரபும் திவ்யதேஷிகம்
த்ரதஷபூஜிதம் சிந்திதப்ப்ரதம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே

ஷரணம் ஐயப்பா சுவாமி ஷரணம் ஐயப்பா
ஷரணம் ஐயப்பா சுவாமி ஷரணம் ஐயப்பா

பவபயாபகம் பாபுகாவஹம்
புவனமோகனம் பூதிபூஷனம்
தவளவாகனம் திவ்யவாரனம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே

ஷரணம் ஐயப்பா சுவாமி ஷரணம் ஐயப்பா
ஷரணம் ஐயப்பா சுவாமி ஷரணம் ஐயப்பா

களம்ருதுஸ்மிதம் சுந்தரனானம்
களபகோமளம் காத்ரமோஹனம்
களபகேசரி வாஜிவாஹனம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே

ஷரணம் ஐயப்பா சுவாமி ஷரணம் ஐயப்பா
ஷரணம் ஐயப்பா சுவாமி ஷரணம் ஐயப்பா

ஷ்ருதஜனப்ரியம் சிந்திதப்ரதம்
ஷ்ருதிவிபூஷனம் சாதுஜீவனம்
ஷ்ருதிமனோஹரம் கீதலாலசம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே

ஷரணம் ஐயப்பா சுவாமி ஷரணம் ஐயப்பா
ஷரணம் ஐயப்பா சுவாமி ஷரணம் ஐயப்பா

Thursday, September 3, 2009

எங்கும் நிறை

துன்ப மங்லாத நிலையே சக்தி
தூக்க மிலாக்கண் விழிப்பே சக்தி
அன்பு கனிந்த கனிவே சக்தி
ஆண்மை நிறைந்த நிறைவே சக்தி
இன்ப முதிர்ந்த முதிர்வே சக்தி
எண்ணத் திருக்கும் எரியே சக்தி
முன்புநிற் கின்ற தொழிலே சக்தி
முக்தி நிலையின் முடிவே சக்தி.