Wednesday, July 29, 2009

புரட்சி தமிழன் ? தமிழின தலைவர் ?

முத்தமிழ் பேரறிஞர், டாக்டர், கலைஞர், தமிழினத்தின் தனிப்பெரும் தலைவர், தமிழ்நாட்டின் முதலமைச்சர் (இன்னுமேதும் இருக்காப்பா?) மு. கருணாநிதி அவர்களின் உண்ணாவிரதத்தினை கண்டு அஞ்சி நடுங்கி , கண்கள் பனித்து இதயம் கனத்து, இலங்கை அரசானது போர் நிறுத்தத்தினை அறிவித்தது.இந்த போர்நிறுத்தத்துக்கு முழுக்காரணமே மு க வின் உண்ணாவிரதமே ஒழிய வேறொன்றுமில்லை.



மேரீனாவுலையே Fan ஆ ?


பத்திரிகையாளர் :"மத்திய அரசிடம் எதுவரை போர் நிறுத்தம் வலியுறுத்துவீர்கள்?"

மு க : "போர் நிறுத்தம் ஏற்படும் வரை வலியுறுத்துவோம்"

பத்திரிகையாளர் :எதுவரை உண்ணாவிரதம் இருப்பீர்கள்

மு க : சாப்பிடும்வரை இருப்பேன் .



புரட்சி

இப்படி எல்லாம் தமிழ்நாட்டுக்கும், தமிழக மக்களுக்கும் வழிகாட்டியா இருந்து, என்னமா கண்ணுன்னு நக்கல் அடிச்சிகிட்டும், லொல்லு பேசியும், அல்வா குடுத்துகிட்டும் இருக்கும் நமிதா நாயகனும், ஜொள்ளின் வடிவமுமான நம்ம சத்தியராஜ் தன்னை வாழும் பெரியார் அப்படின்னு கூப்புட சொல்றாராமா. பெரியார் படத்துல நடிச்சதாலும், சும்மா அப்ப அப்ப பப்ளிசிடி ஸ்டண்டுக்காக சாமி இல்ல அப்படின்னு சவுண்டு விட்டுக்கிட்டு இருந்ததாலும், வேற வழியே இல்லாத காரணத்தினால் வேலு பிராபகரன் எடுத்த கடவுள் எதிர்ப்பு படங்களில் நடிச்ச காரணத்தினாலும் இவரு வாழும் பெரியார் ஆயிட்டாராம. ஏன் சாமி நீங்க அடுத்தவங்களை நக்கல் நையாண்டி அடிக்கிறது எல்லாம் இருக்கட்டும் முதலில் நீங்க சரியான்னு பாத்துகோங்க அப்பறம் நக்கல் நையாண்டி எல்லாம் அடிக்கலாம்.
காந்தியா நடிச்சவரும் வாழும் காந்தியாக முடியுமா, பெரியாரா நடிச்சவரும் பெரியார் ஆக முடியுமா? நினைப்பு தான் பொழப்பை . ( தங்க்ஸ் santhosh}

சென்னை: முதல்வர் கருணாநிதியின் உண்ணாவிரதத்திற்குப் பிறகும் அசைந்து கொடுக்காவிட்டால் ராஜபக்சே மனிதனே கிடையாது என்று ஆவேசமாக கூறியுள்ளார் நடிகர் சத்யராஜ்.முதல்வர் கருணாநிதியை சந்தித்து கண்ணீர் மல்க உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு கேட்டுக் கொண்டார் சத்யராஜ்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வலியுறுத்தி தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். நான் அவரை உண்ணாவிரத்தை கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். தனது உடல் நிலையை கருத்தில்கொண்டு கலைஞர் அவர்கள் உண்ணாவிரத்தை கைவிட வேண்டும்.
இலங்கை அரசு போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று உலக நாடுகளும், உலக தலைவர்களும் வேண்டுகோள் விடுத்தும் இலங்கை அதிபர் ராஜபக்சே போர் நிறுத்தம் செய்ய மறுக்கிறார். ராஜபக்சே ஒரு மனிதனே கிடையாது. தமிழினத்தை அழிக்க வேண்டும் என்ற வெறியோடு இருக்கும் மிருகம்.
மத்திய அரசு உடனடியாக இலங்கை தமிழர் பிரச்சனையில் ஈடுபட்டு போர் நிறுத்தம் ஏற்பட வழிவகை செய்ய வேண்டும். கலைஞர் அவர்கள் இந்த
வயதிலும் உண்ணாவிரதம் இருப்பது எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது.
அவர் உண்ணாவிரதத்தை கைவிட்டு, உடல் நிலையை பாதுகாக்க வேண்டும். மருந்துகளை சரியான நேரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார்.

கருணாநிதிக்கும் ஈழத்தில் நடக்கும் கொலைக்கும் சம்மந்தம் இல்லையா ?
இந்த சத்தியராஜின் நாடகத்தை மக்கள் புரிந்து கொள்வது எப்பொழுது ?


காவிரி பிரச்சனை உண்ணாவிரத்தில் சத்திய ராஜ் பேசுகையில்

உண்ணாவிரத்தில் சத்யராஜ் பேசுகையில், இங்கு யாருடைய பெயரைச் (ரஜினி) சொன்னால் எனக்குக் கைத்தட்டல் கிடைக்குமோ, அந்தப் பெயரைச் சொல்வதை விட, நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாவேன். கர்நாடகத்தில் தமிழனை கன்னடக்காரர்கள் தாக்கிக் கொண்டுள்ளனர். அதைப் பற்றி மட்டும்தான் இங்கு பேசுவேன்.

யாருன்க்க உங்களை பேச வேண்டாம் என்று சொன்னது . கர்நாடகத்தில் தமிழன் அடி படுவதற்கும் ,ஈழத்தில் தமிழன் கொல்லபடுவதற்கும் காரணமா அரசியல் வாதிகளை பத்தி நீங்க என்ன பேசி கிழிச்சிங்க .

என் பொண்டாட்டி கூட நான் படுக்குறேன் உனக்கு ஏண்டா வலிக்குது. உன் பொண்டாட்டி கூடவா படுகிறேன்.
நீங்க யாரு பொண்டட்டிகோட படுக்கலை ?

உலகில் தமிழன் எங்கு அடிபட்டாலும் நாம் குரல் கொடுக்க வேண்டும். ஈழத்தில் அடிபட்டாலும் குரல் கொடுக்க வேண்டும். அங்கு இருப்பவன் உனது சகோதரன், உனது சகோதரி. தமிழனை உலகில் எங்குமே நசுக்க முடியாது. அதை விட மாட்டோம். நீ குரல் கொடுக்கலை என்றால் நீ ஒரு முட்டாக்கூ....அவ்வளவுதான் என்றார் சத்யராஜ்.

கண்டிப்பா . உங்களோட படத்தை காசு குடுத்து பார்த்த எல்லோரும் அப்படித்தான் . நீங்களும் உங்க பையனும் ஜட்டிய மட்டும் போட்டு கிட்டு மும்பைகரி கூட போட்ட ஆட்டத்த மறக்க முடயும்மா.
நடிகையின் கதையில் ஒருத்தி எழுதி . நீ அவ கால பிடுச்சு .
சகோதிரி பத்திஎல்லாம் நீங்க பேசிறிங்க ?


நீங்க நடிச்தில் கிட்டத்தட்ட முக்கால்வாசி செக்ஸ் படம் தன் . ஒரு பெரியார் படத்தில நடிச்தில் நீங்க எல்லாம் கலாச்சரத்தை பத்தி பேசிறிங்க
.




No comments: